Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, July 12, 2013

வர்ணங்களில் வாட்டர் சப்ளை செய்யும் மாநிலம்?

அகமதாபாத்: இந்தியாவின் அடுத்த பிரதமருக்கான பி.ஜே.பி.யின் வேட்பாளர் என்று விளம்பரப்படுத்தப்படும் நரேந்திர மோடி முதலமைச்சராக இருக்கும் குஜராத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் எடுப்பதிலும்கூட - ஜாதி வாரியாக நேர ஒதுக்கீடு - தண்ணீர்க் குழாயில்கூட நான்கு வர்ணம் என்னும் மனுதர்மக் கொடி பறக்கிறது.

மனுதர்மம் குறிப்பிடுகிறது முதலில் பார்ப்பனன், பிறகு சத்திரியன், அடுத்து வைசியர், இறுதியாக சூத்திரர்கள் பகுத்தறிவற்ற விலங்குகளிடம்கூட இல்லாத இந்த பாகுபாட்டை ஆரியர்கள் தங்களின் வயிறு வளர்க்க உழைப்பில்லாமல் வாழ்நாள் முழுக்க உண்டுகொழுக்க வழிகண்டு அதை சட்டமாக எழுதி வைத்தனர். சில ஆண்டுகளாக அடங்கி இருந்த இந்த மனுதர்ம கோடரி மீண்டும் தன்னுடைய மழுங்கிப்போன கூர் முனையை தீட்டிக்கொண்டு புறப்பட்டுள்ளது. கூர்முனையை தீட்டுவது மனுவின் புதல்வராக தன்னை உலகிற்கு காட்டிக்கொள்ளும் (இந்து மக்களின் பாதுகாவலன்) மோடியின் மாநிலமான குஜராத்தில்தான் அதுவும் தலைநகரின் அருகில் அகமதாபாத்தில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள தன்வாதா (ப்ஹவியா வட்டம்) இந்த ஊரில் உள்ள பஞ்சாயத்துத் தண்ணீர் தொட்டியில் ஜாதீய பாகுபாட்டை நேரடியாக பறைசாற்றும் வாக்கியம் உள்ளது. முக்கியமாக தலித்துகளுக்கு எதிரான ஜாதி வன்மம் இதில் அடங்கியுள்ளது. இப்படி பாகுபாடு பார்ப்பது தேசிய குற்றவியல் சட்டப்படி தண்டனைக்குட்பட்டது. 

ஜாதிவாரியாக நேரம்: காலை 9 மணிமுதல் 10 மணிவரை பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதி படேல் இனத்தவருக்கு மட்டும்.

காலை 10 முதல் 12 (மதியம்) மணிவரை பர்வாதா வங்கிரீஸ் மற்றும் கும்பார்.

நண்பகல் 12 முதல் (மதியம்) ஒரு மணிவரை தலித் இனத்தவருக்கு என எழுதியுள்ளனர். 

இந்தக் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் நிமிஷா தோனியா என்ற பெண் ஆவார், ஆனால் அவர் வீட்டில் ரொட்டி சுடுவதை தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை; பஞ்சாயத்து நிர்வாகம் அனைத்தையும் அவரது கணவர் ப்ரதாப்சிங்தோனியா தான் நிர்வகிக்கிறார்.

இந்த வாசகம் எழுதியதைக் குறித்து அவர் பெருமைப்படுகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு இதில் என்ன தவறு இருக்கிறது? பரம்பரை பரம்பரையாக நாங்கள் செய்து வந்ததைத்தான் செய்கிறோம். இதில் ஜாதிவன்மம் என்று பெயர் சொல்லி நீங்கள் தான் புதிய பிரச்சினையை கிளப்புகிறீர்கள். இந்த ஊரில் உள்ள எந்த தலித்தாவது இது குறித்து ஒன்றுமே சொல்வது கிடையாது. எங்கள் ஊர்மக்களுக்கு தெரியும், எப்படி வாழ்வது என்று. பத்திரிக்கையாளர்களான நீங்கள் வந்து புதிதாக எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கவேண்டாம், என்கிறார். பஞ்சாயத்துத் தலைவர் எங்கே?

உங்கள் மனைவி தானே பஞ்சாயத்துத் தலைவர், அவர் எங்கே எனக் கேட்டதற்கு, அவர் எதற்கு, அதுதான் நான் இருக்கிறேனே, என்று சர்வசாதாரணமாகக் கூறியவர், மேலும் ஒரு அதிர்ச்சியான செய்தியை சொல்கிறார். இங்கு மட்டுமல்ல; குஜராத்தில் எந்த ஊருக்கும் சென்று பாருங்கள் இப்படித்தான் இருக்கிறது. இது குறித்து நகர நிர்வாக அதிகாரியுடம் கேட்டபோது, அவர் நகரத்தின் அருகில் இருப்பதால் வேலைக்குச் செல்பவர்கள், பள்ளிக் கூடம் செல்பவர்களுக்கு ஜாதிப்பாகுபாடு என்கிறார்.

குழாய்களிலும் ஜாதிப்பிரிவு: அதுமட்டுமல்ல இந்த ஊரில் குடிநீர் எடுத்துச்சொல்லும் குழாய் கள் கூட தொட்டியில் இருந்தே 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. உயர் ஜாதிக்காரர்களுக்கு அவர்களின் தெருவிற்கென தனியாகக் குழாய் கள். அவை; அவர்களின் வீட்டின் குளியலறை வரை நீள்கிறது. பிற் படுத்தப்பட்டோருக்கு என்று தனியாக குழாயும், தலித் மக்களுக்கு என்று தனியாக குழாயும் உள்ளது. தலித் மக்கள் ஊருக்கு வெளியில் வாழ்வதால் அங்கு ஒரே ஒரு குழாய் தான் அதுவும், எல்லோருக்கும் சென்ற பிறகு தண்ணீர் திறந்து விடப்படுவதால் ஒரு நாளைக்கு சில குடங்கள் கூட தலித் குடும்பத்தின ருக்கு கிடைப்பதில்லை, தன்வாதா கிராமத்தில் மற்ற இனத்தாரை விட தலித் மக்கள்தான் அதிகம் வசிக்கின்றனர்.

எட்டாண்டுகளாக இதே நிலைதான்: இதுகுறித்து அந்தக் கிராம தலித் குடும்பத்தார் கூறும் போது புதிதாக பஞ்சாயத்து வந்தபிறகு கடந்த 8 ஆண்டுகளாக இந்த நிலைதான், முதலில் ஊரில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது; ஆகையால் நாங்கள் தூரத்தில் உள்ள குளங்களில் சென்று தண்ணீர் கொண்டு வருவோம். ஆனால் இன்று குழாய் போட்ட பிறகு ஏதோ தண்ணீர் கிடைக்கிறது. இந்தப் பாகுபாட்டை கூறி நியாயம் கேட்டு கிளம்பினால், எங்களுக்கு இப்போது கிடைப்பதும் கிடைக்காமல் போகும் என்றார். மேலும் சில நாள்களாக எங் களுக்கு மறைமுகமாக மிரட்டல்கள் வர ஆரம்பித்து விட்டன. உங்க ளுக்குத் தண்ணீர் கிடைக்கிறதா? கிடைக்கவில்லை என்றால் கூறுங்கள்; அதை விட்டுவிட்டு புகார் கூறுவது போன்ற நடவடிக்கை எடுத்தால் இருக்கிற தண்ணீரும் கிடைக்காமல் போய்விடும் என் கிறார்கள். நகரத்திற்கு செல்லும் பேருந்தில்கூட எங்களுக்கு இடம் கொடுக்க மறுக்கிறார்கள், கேட்டால் என்ன கலெக்டர் வேலைக்கா செல்கிறீர்கள்? தெருக்கூட்டத்தானே செல்கிறீர்கள்? அதற்கு அவசரமாக போகத்தேவையில்லை என்று சொல்கிறார்கள், என அந்தக் கிராமத்தை சேர்ந்த தலித் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

இது உணர்த்துவது என்ன? மனிதர்களை மொழியால், இனத்தால், நிறத்தால், தேசத்தால் ஒருபோதும் ஒன்றுபடுத்த முடியாது. ஒரே கடவுள் என்ற அடிப்படையிலும், மனிதர்கள் அனைவரும் ஆதம், ஹவ்வா என்ற ஆண், பெண்ணிடமிருந்து உருவானவர்கள் என்ற அடிப்படையிலும் மட்டுமே 
ஒன்றுபடுத்த முடியும்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!