Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, November 8, 2011

முதன்மைக்கு முன்னுதாரணமான தமிழக முதல்வர் !

முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், அனைத்து சாட்சிகளையும் விசாரித்து முடித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த ஜெயலலிதா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டது.

ஆனால், ஜெயலலிதா தரப்பில், வீடியோ கான்பரன்ஸ் அல்லது ஸ்டேட்மென்ட் மூலம் பதிலளிப்பதாகக் கூறி தாக்கல் செய்த மனுவை கோர்ட் நிராகரித்தது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் சென்ற ஜெயலலிதாவுக்கு, அக்., 20ம் தேதி கண்டிப்பாக பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என பணித்தது.

கடந்த 20 மற்றும் 21 ம் தேதிகளில் நீதீபதி மல்லிகார்ஜூனய்யா முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார், இவரிடம் 500 க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. இவை அனைத்தும் சேர்த்த சொத்து மற்றும் நகைகள் தொடர்பானவை.

மீண்டும் 8ம் தேதி ( இன்று ) ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இன்றும் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கேள்வி- பதிலை எழுத்து மூலமாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விலக்கு அளிப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும், முதல்வருக்கு வசதி இல்லையென்றால் மாற்று தேதியில் விசாரணையை வைத்து கொள்ள சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் கூறியிருந்தது.

தவறான முன்னுதாரணத்தை மக்களுக்கு காண்பித்து கொடுக்கிறார் தமிழக முதல்வர், கூடிய விரைவில் மக்களிடம் கெட்ட பெயர் வாங்கிவிடுவார் இதில் எந்த சந்தேகமும் இல்லை.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!