Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, November 1, 2011

விஜய்க்கு தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்கை காப்பாற்றிய ஜெயா?

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தொடங்கியது முதலே உள்ளாட்சி தேர்தல் வரை, விஜய்யின் மக்கள் இயக்கம், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள இசை கல்லூரி மற்றும் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த புது உத்தரவு பிறப்பித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அதன்படி தமிழகத்தின் மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 17 இசை பள்ளிகளின் தரத்தை உயர்த்த, விஜய்யின் அம்மாவும், டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியுமான ஷோபா சந்திரசேகருக்கு "கலையியல் அறிவுரைஞர்" எனும் புதுப்பதவியை வழங்கியுள்ளார்.

இவரது பதவியின் முக்கிய நோக்கமே தமிழகத்தில் உள்ள இசை பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது தான். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 4 இசை கல்லூரிகளுக்கும் வீணை காயத்ரி என்பவர் இந்த பதவியை வகித்து வருகிறார்.

சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக.,வுக்கு ஆதரவாக விஜய்யின் மக்கள் இயக்கம் செயல்பட்டதன் பிரதிபலனாகத்தான், தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதமாக ஷோபா சந்திரசேகருக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!