Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, November 12, 2011

அதிக எடை கூடிய குழந்தை பிறந்தால் அதிக கவனம் தேவை! ஆய்வில்!!

குளுகோஸ் மாற்றத்தினால் பல்வேறு நோய்களுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். குறிப்பாக அவர்கள் சர்க்கரை நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

தாயின் கருப்பையில் எடை குறைவாக வளர்ந்து பிறக்கும் குழந்தைகளுக்கு இன்சுலின் குறைபாடு ஏற்படுகிறது. ஏனெனில் இன்சுலின் ஹார்மோன் தாயின் கர்ப்பபைக்குள் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக உள்ளது.

இன்சுலின் குறைபாட்டால் வளர்ந்த பின்னர் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது. எடை குறைவாக பிறக்கும் சில குழந்தைகளின் உடலில் திடீரென சில மாற்றம் ஏற்படுகிறது. இதன் மூலம் அவர்களின் எடையும், கணையத்தின் அளவும் அதிகரிக்கிறது.

அதே நேரத்தில் 2 1/2 கிலோவுக்கும் குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு மிக சிறிய அளவிலான கணையம் வளர்கிறது. இந்த காரணங்களாலும் அவர்களின் உடலில் சர்க்கரை நோய் ஏற்படக்கூடிய நிலை உண்டாகிறது.

இந்த தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, கர்ப்பிணி பெண்கள் 2 1/2 கிலோ முதல் 3 1/2 கிலோ எடையுள்ள குழந்தையை பெற சத்தான உணவை சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!