Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, November 12, 2011

ராத்திரி நேரத்து பூஜையில் ஜெயா / சசி இருவரும் ஆசையில் !?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பரிக்கல் கிராமத்தில் நரசிங்கபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஜெயலலிதா, சசிகலா இருவரும் இரவில் வந்து வணங்கி செல்வது வழக்கம். சசிகலா, அடிக்கடி இந்த கோவிலுக்கு வந்து பரிகார பூஜை செய்து செல்வார். இதனால் இந்த கோயில் மிக பிரபலம் ஆனது.

இந்த கோவிலின் குருக்கள் ரமணி பட்டாச்சாரியார். ஜெயலலிதா, சசிகலா வந்து பூஜைகள் செய்து வருவதால், சுற்று வட்டார பகுதியில் இந்த குருக்கள் மிகப்பிரபலம்.

கடந்த திமுக ஆட்சியில், இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து, பணி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கிருஷ்ணமுர்த்தி என்பவரை பணியில் அமர்த்தினார்கள்.

தற்போது மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்ததும், தான் மீண்டும் கோயில் குருக்கள் ஆக வேண்டும் என்று அதிமுக தலைமையிடம் கேட்டார்.

இதற்கு அதிமுக தலைமையில் ஒப்புதல் தந்தது. இன்று (12.11.2011) அவர் மீண்டும் கோயில் பொறுப்பை ஏற்கவிருந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று இரவு 8 மணிக்கு, டூவீலரில் தனது வீட்டிற்கு போகும்போது ரயில்வே கிராசிங்கில் ஒரு மாருது ஆம்னி வேன் இவரது டூவீலரை இடித்துள்ளது. அதில், கீழே விழுந்த குருக்களை, மாருதி வேனுக்குள் அள்ளிப்போட்டுக்கொண்டு சென்றூவிட்டது மர்ம கும்பல்.

இந்த சம்பவம் தொடர்பாக, திருநாவலூர் போலீலில், குருக்களின் மனைவி வத்சலா புகார் கொடுத்துள்ளார். போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!