Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, November 7, 2011

சுற்று சூழல் இல்லாத சிங்கார சென்னை! யுனிசெப் அமைப்பு!!

சென்னை : நிலையான சுற்றுச்சூழல் நிலையை, தமிழகம் எட்டுவது கடினம்' என, யுனிசெப் அமைப்பின், தமிழக மற்றும் கேரள மாநிலத்திற்கான தலைவர் சதீஷ்குமார் பேசினார்.

ஆண்டுதோறும், அக்.15ம் தேதி, உலக கை கழுவுதல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில், உலக கை கழுவுதல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அவ்வை இல்லம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர், கை கழுவுதலின் அவசியத்தை விளக்கும் பாடல்கள் மற்றும் நாடகங்களை நடத்திக் காட்டினர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற, யுனிசெப் அமைப்பின் தமிழக மற்றும் கேரள மாநிலத்திற்கான தலைவர் சதீஷ்குமார் பேசியதாவது: சோப்பு உபயோகித்து கை கழுவுதலை தொடர்ந்து கடைப்பிடித்தால், குழந்தைகள் இறப்பை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். மத்திய அரசு, சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆனால், இதுகுறித்த விழிப்புணர்வு, மக்களிடம் சரியாக சென்றடையவில்லை. கடந்த 2000ல், புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்கு திட்டத்தை, ஐ.நா., அறிவித்தது. இதன்படி, நிலையான சுற்றுச்சூழல் நிலையை, தமிழகம் எட்டுவது கடினம்' என்றார்.

அரசியல் வாதிகள் பதவியில் அமர்ந்ததும் தங்களுக்கு சொத்து குவிப்பதும் தன்னை சார்ந்தவர்களுக்கு பதவிகள் வழங்குவதும்தான் இவர்கள் முதல் வேலை.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!