Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, February 21, 2012

எல்லாமே இந்த ஒரு சாண் வயிற்றுக்குத்தான்

"எல்லாமே இந்த ஒரு சாண் வயிற்றுக்குத்தான்'' என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பசி மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகத்தில் எந்த பிரச்னையும் இருக்காது என்பார்கள்.

சித்தர்கள், முனிவர்கள் நூற்றுக்கணக்கான நாட்கள் எதையும் சாப்பிடாமல் காற்றை மட்டும் சுவாசித்து உயிர் வாழ்ந்தார்கள் என்று படித்திருப்பீர்கள்.

பசி எடுக்காமல் இருப்பதற்கு என்ன செய்வது?

அகத்திய மா முனிவர், பசி எடுக்காமல் இருக்க, ஓர் ஐடியா சொல்கிறார், அவர் எழுதிய பாடலொன்றில்.

நாயுருவி விதையை எடுத்துக் கொண்டு அதைத் தாய்ப் பாலை விட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு எட்டி விதை ஒன்றையும் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் பசும்பாலில் கலந்து கடவுளை வணங்கி கண்ணை மூடிக் கொண்டு "மடக்மடக்'கென்று குடித்துவிட வேண்டுமாம். அதற்குப் பின்பு எத்தனை நாளானாலும் பசி எடுக்கவே எடுக்காதாம்.

விலைவாசி உயர்ந்துள்ள இந்தக் காலத்தில் இந்த ஐடியா ரொம்ப நல்லாருக்கே என்று யோசிக்கிறீர்களா?

அப்படி பசியில்லாமல் இருப்பவர் பக்கத்து வீட்டுச் சமையல் வாசனையை முகர்ந்து சாப்பிட வேண்டும் என்று மனம் மாறிவிட்டால் என்ன செய்வது?

அதற்கும் வழி உண்டு, மூக்கை நன்றாக பொத்திக்கொல்லுங்கள்., அப்புறம் பசியால் உயிரே போச்சு என்பீர்கள்.

1 comments :

பசியை அடக்கிடலாம் அதை நம்பி இருக்கும் மற்ற உறுப்புகளை என்ன செய்ய போகிறீர்கள் என்பதை அடுத்த பதிவில் சொல்லலாம்.

அருமைப்பதிவு வாழ்த்துகள்

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!