Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, February 20, 2012

தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்!

தலைவலியில் 3 வகைகள் உண்டு.

* முதல் வகை சமூக மனவியல் காரணங்களால் டென்ஷன், களைப்பு, எரிச்சல் தரும் சம்பவங்கள் போன்ற காரணங்களால் உண்டாகுது.

* இரண்டாவது வகையில் உடல் வகை, மருத்துவம் போன்ற காரணங்களால் தலைவலி வருது. கண்ணில் அதிகப்படியான அழுத்தம், பல்வலி, `சைனஸைட்டிஸ்'ங்கற மூக்கடைப்பு, சில உணவுப்பொருட்கள் உட்கொள்வது, அலர்ஜி தரும் சில வகையான மருந்துகளைச் சாப்பிடுவது, தூக்கமின்மை, மிகவும் குளிர்ந்த நீரில் குளிப்பது, சினிமா பார்ப்பது, அருகில் இருந்து டி.வி. பார்ப்பது, காற்றோட்டம் இல்லாத சுகாதாரமற்ற அறையில் நீண்ட நேரம் இருப்பது போன்ற பல காரணங்களால் தலைவலி உண்டாகுது.

* மூன்றாவதாக, தலையில் யாராவது ஓங்கி அடித்தால், தலைவலி வந்துடும். அதனால, மூளைக்குள் சின்ன ரத்தக் கசிவுகள் உண்டாகி, அது தலைவலியாக மாறிடும். இது முதலில் மூளைக்குள் `ட்யூமர்'ங்கற வலியாக இருக்கும். தொடர்ந்து, `மெனிஞ்சைட்டிஸ்' என்ற காய்ச்சல் ஆரம்ப நோய்க்கான அறிகுறியாக வரும். `என்ஸெபலைட்டிஸ்' என்று சொல்லப்படும், மூளைக்குள் வீக்கம் போன்ற நோய்கள் எல்லாம் சேர்ந்து தலைவலியை உண்டாக்கிடும்.

பெரும்பாலானவங்களுக்கு முதல் வகையான தலைவலி தான் வரும். இந்த தலைவலி வருவதை வைத்து நாம இப்படியும் கணிக்கலாம். நீங்கள் எப்படிப்பட்டவங்க? எப்படி வாழ்கிறீங்க? எப்படி உணர்ச்சிவசப்படுகிறீங்க? எப்படி கோபப்படுகிறீங்க, எவ்வளவு பொறுமை உங்ககிட்ட இருக்குன்னு கண்டுபிடிச்சிடலாம்.

ஒற்றைத் தலைவலியை `மைக்ரேன்'னு சொல்வாங்க. இதனால் பாதிக்கப்படுறவங்களுக்கு தலையை ஒருபக்கமாக பிரிச்சி எடுத்த மாதிரி வலி, பின்னியெடுக்கும். இந்த தலைவலிக்குததான் நிறைய மருந்துகளும் கண்டுபிடிச்சிருக்காங்களாம்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!