Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, February 24, 2012

பணிப்பெண்ணிடம் பாலியல் வன்புணர்வு! நீதிபதிக்கு வலைவீச்சு!?

ஹைதராபாத்: வேலியே பயிரை மேய்ந்த கதைகளுக்கு இந்தியாவில் பஞ்சம் ஏது? காவல் நிலையங்களில் கொலைகளும், பாலியல் வன்புணர்வுகளும் நடந்த செய்திகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் வீட்டு பணிப் பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு முயன்ற சிவில் நீதிமன்ற நீதிபதியை போலீஸ் தேடி வருகிறதாம்.

ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் கிங்கின் ஜமெட்ல தன்டா பகுதியைச் சேர்ந்தவர் குரவத் பாலசந்தர். அவர் சட்டபள்ளி நகரில் உள்ள நீதிமன்றத்தில் சிவில் நீதிபதியாக உள்ளார்.

அவரது வீட்டில் வேலை பார்க்கும் பெண் 24 வயதாகும் கலா (பெயர் மாற்றம்). அவர் பார்க்க அழகாக இருப்பதால் அவர் மீது நீதிபதிக்கு மோகம் ஏற்பட்டது. அவரை எப்படியும் அடைந்தே தீர வேண்டும் என்று நீதிபதி நினைத்தார். ஆனால் வீட்டில் அனைவரும் இருப்பதால் தனது திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் இருந்தது.

இந்நிலையில் நீதிபதியின் குடும்பத்தார் அவரை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் சென்றனர். இது தான் சமயம் என்று நீதிபதி வேலைக்காரப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். நீதிபதியிடம் இருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டார். உடனே இது குறித்து கம்மம் டி.எஸ்.பி. ரங்கன் கௌடிடம் புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீசார் 354வது பிரிவின் கீழ் நீதிபதி பாலச்சந்தர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே பாலசந்தர் நேற்று மதியம் முதல் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு வெளியூர் சென்றுவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!