Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, February 15, 2012

வெளிநாடுவாழ் இந்தியர்களின் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி! ரிசர்வ் வங்கி!!

மும்பை, பிப். 16: இந்தியாவில் சொத்துகளை வாங்கும்போது அது தொடர்பான பரிவர்த்தனை விவரங்களை வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாக்கல் செய்யத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி புதன்கிழமை தெரிவித்தது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கும் இது பொருந்தும்.

வெளிநாட்டினர் இந்தியாவில் அசையாச் சொத்துகளை வாங்கும்போது, அது தொடர்பான பரிவர்த்தனை விவரங்களை 90 நாள்களுக்குள் ரிசர்வ் வங்கியிடம் அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

வெளிநாடுவாழ் இந்தியருக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்துமா என்கிற குழப்பம் நீடித்து வந்தது. இதைப் போக்கும் வகையிலேயே ரிசர்வ் வங்கி இப்போது விளக்கம் அளித்திருக்கிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!