Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, February 18, 2012

ஆபாச செல்போன் தகவலால் பறிபோனது மூன்று உயிர்கள்!!

பெர்ஹாம்பூர்: எம்எம்எஸ் வழியாக தான் ஆபாசமாக இருப்பது போன்று போலியாக தயாரித்து வெளியிடப்பட்ட புகைப்படத்தையடுத்து 2 குழந்தைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

மேற்குவங்க மாநிலத்தின் டோம்கால் பகுதியைச் சேர்ந்தவர் ஜெஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (28). எம்எம்எஸ்ஸில் தனது நிர்வாண புகைப்படம் வெளியானதையடுத்து அவமானம் தாங்கமுடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அவரது கணவர் பாப்லு போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில், தனது அண்டை வீட்டு பெண்ணின் உதவியுடன் ஜெஸ்மி முகத்தை நிர்வாணமான பெண்ணின் உடம்பில் ஒட்டி மொபைல் ஃபோனில் சில இளைஞர்கள் பரப்பியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த புகாரில் நிர்வாண புகைப்படம் ஒன்றுடன் ஜெஸ்மி முகத்தை இணைத்து போலியாக புகைப்படம் தயாரித்து உள்ளூர் இளைஞர்கள் சிலர் எம்எம்எஸ் மூலமாக வெளியிட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இளைஞர் சமுதாயம் எங்கு செல்கிறது? இதற்கு தங்கள் பிள்ளைகளை கவனத்துடன் வளர்ப்பது பெற்றோர்கள் கடமையும் கூட.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!