Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, February 18, 2012

சசியின் சதி வலையில் சிக்கினாரா ஜெயா ?

வருமானத்திற்கு அதிகமான இந்த சொத்துக்கள் சேர்க்கப்பட்டது தொடர்பான வழக்கு பெங்களூரூ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

சசிகலா தன்னிடம் தமிழில் கேள்விகள் கேட்க வேண்டும் என்று கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை தனிக் கோர்ட்டும், ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே சொத்து சேர்ப்பு வழக்கு இன்று பெங்களூர் தனிக் கோர்ட்டில் நீதிபதி மல்லிகார் ஜூனையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அப்போது சசிகலாவிடம் தமிழில் கேள்வி கேட்க அனுமதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்து இருப்பதால் வழக்கை வருகிற மார்ச் 2-ந் தேதி வரை தள்ளி வைக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வக்கீல் கோர்ட்டில் மனு கொடுத்தார். அதை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதைத் தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை தொடங்கியது. நீதிபதியின் கேள்விகளை சசிகலாவுக்கு மொழிப் பெயர்த்துச் சொல்ல ஹரீஸ் என்ற மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் நீதிபதியின் கேள்விகளை தமிழில் மொழி பெயர்த்து சொன்னார்.

சசிகலா அளித்த பதிலை அவர் நீதிபதியிடம் ஆங்கிலத்தில் திரும்ப சொன்னார்.

பெங்களூரூ நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சசிகலாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, வங்கிக் கணக்கை நான் மட்டுமே இயக்கி வந்தேன். அதில் முதலமைச்சர் ஜெயலலிதாவும் கூட்டாளிதான். ஆனால் அதைப் பற்றிய எந்த விவரமும் அவருக்குத் தெரியாது. அவர் குற்றமற்றவர். தவறுக்கு நானே பொறுப்பு என்று கூறி சசிகலா கண்ணீர் விட்டு அழுதார்.

ஜெயா, சசி பிறிவு இது ஒரு நாடகம் இதை இயக்குவது பிரபல வக்கீல் ஒருவர், இந்த கேசை உடைக்கவும் மக்களை நம்பவைக்கவும், சசியின் கண்ணீர் நடிப்பு.(தன்னை ஒதுக்கிவைத்தவரை கோபப்படாமல) அவரை இவ்வழக்கிலிருந்து காப்பாற்ற முயற்சிப்பதிலிருந்து புரியவில்லையா,மேலும் கபட நாடகமிடும் முதல்வருக்கு இது அழகல்ல என்றார். பெயர் சொல்ல விரும்பாத உயர் காவல் அதிகாரி ஒருவர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!