Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, January 6, 2013

குண்டு வெடிப்பில் கைதானவர் கிரிக்கெட்டில்!

மும்பை: பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்த பிறகு விடுவிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரசூல், இந்தியா “A” கிரிக்கெட் அனிக்கு தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். காஷ்மீரை சேர்ந்த வீரர் ஒருவர், இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக, சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியில் கலந்து கொண்டது. கடந்த 2009 அக்டோபர் 17 அன்று, இந்த அணியினர் தங்கியிருந்த அறையில் புகுந்த கர்நாடகா காவல்துறை, ஜம்மு காஷ்மீர் அணியினரின் பைகளைச் சோதனை செய்தது. இதில், இருவரின் பைகளிலிருந்து சந்தேகத்திற்கு இடமான சப்தம் வந்தது எனக் கூறி, அவர்களைக் கைது செய்தது. இதற்கு பல தரப்புகளிலிருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், தவறான தகவல்களின் அடிப்படையில் அவர்களைக் கைது செய்து விட்டதாக கூறி கர்நாடகா காவல்துறை இருவரையும் விடுவித்தது.

காஷ்மீர் இந்தியாவைச் சேர்ந்தது என்று நாம் தொடர்ந்து கூக்குரலிட்டு வருகிறோம் .ஆனால் காஷ்மீரிகளை இந்தியர்களாக, குறிப்பாக காஷ்மீர் முஸ்லிம்களை இந்தியர்களாக நாம் மதிக்கவில்லை என்பதையே இது போன்ற நடவடிக்கைகள் காட்டுகின்றன. மாநிலத்தின் அணியில் பங்குகொண்ட ஒரு வீரருக்கே இந்தியாவில் இது போன்ற கொடுமைகள் இழைக்கப்படுகிறது என்றால் காஷ்மீரில் வாழும் சாதாரண முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை கற்பனை கூட செய்ய முடியவில்லை.

1 comments :



ஆப்கனில் இஸ்லாமியர்களைக் கொன்று குவித்தவர்கள் கிறிஸ்துவத் தீவிரவாதிகளா?
குஜராத்தில் இஸ்லாமியர்களைக் கொன்று குவித்தவர்கள் இந்துத் தீவிரவாதிகளா?
பர்மாவில் இஸ்லாமியர்களைக் கொன்று குவித்தவர்கள் பௌத்தத் தீவிரவாதிகளா?
தமிழீழத்தில் தமிழர்களைக்  கொன்று குவித்தவர்கள் பௌத்தத் தீவிரவாதிகளா?

இல்லையே! அப்படி இருக்கும்போது பாகிஸ்தானிலிருந்து வரும் தீவிரவாதியை மட்டும் ஏன் 'முஸ்லிம் தீவிரவாதிகள்" என அடையாளப் படுத்த வேண்டும்?
J
தீவிரவாதச் செயல்களில் ஒருவன் ஈடுபட்டால் அவன் தீவிரவாதி. அவ்வளவுதான்.

சிந்தித்து செயல்படுங்கள் நண்பர்களே!

கலெக்டர் அலுவலத்திற்கு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த சென்ற கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழுவினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தீவிரவாதிகள்.


உதயக்குமார் அவர்களையும் அணு உலை எதிர்ப்பவர்களையும் சுட்டுக் கொல்ல  வேண்டும் எனக் கூறும் காங்கிரஸ்காரர்கள் தீவிரவாதிகள்.

மாவோயிஸ்ட் வேட்டை என்னும் பெயரில் அப்பாவி மக்களைக் கொள்பவர்கள் தீவிரவாதிகள்.


ராஜீவ் கொலை வழக்கை முறையாக விசாரிக்காமல் மூன்று தமிழர்களை தூக்கில் இட துடிப்பவர்கள் தீவிரவாதிகள்.


குஜராத்தில் சிறுவர்களைக் கூட விட்டு வைக்காமல் தீக்கிரையாக்கியவர்கள் தீவிரவாதிகள்.

கரசேவை என்னும் பெயரில் பிற மதத்தினர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் தீவிரவாதிகள்.


இப்படி அனைத்து தீவிரவாதிகளையும் இங்கே வளர்த்து விட்டு, எங்கோ பாகிஸ்தானிலிருந்து வரும் தீவிரவாதிகளுக்கு 'முஸ்லிம் தீவிரவாதிகள்' என பட்டம் கொடுத்து ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகளாக பார்த்தால்  நீங்களும் தீவிரவாதியே!

பிற மனதை நோகடிக்காமல் இருப்போம்! மனித நேயம் வளர்ப்போம்!guru .

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!