Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, August 8, 2013

நினைவிருக்கிறதா இவரை ?

முஹம்மது ஹனிப் இந்த பெயர் நம்மில் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது என்று தெரியவில்லை.

ஆனால் 2007 ஆம் ஆண்டு காலகட்டதில் உலகின் அனைத்து ஊடகங்களிலும் இவர் தான் பல நாட்களுக்கு தலைப்பு செய்தி அதிலும் இந்திய ஊடகங்களில் 24 மணி நேர செய்தியே இவர் தான். எதற்காக தெரியுமா ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் விமான நிலையத்தில் வைத்து தீவிரவாதி என்ற பொய்யான குற்றசாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டது.இவரது விசாவையும் ஆஸ்ட்ரேலிய அரசு ரத்து செய்தது. 

இந்தியாவின் பெங்களூரை சேர்ந்த இளம் மருத்துவர் ஹனீப். இவர் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வந்த போது தான் ஜூலை 2 ஆம் நாள் 2007ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 25 நாள் சிறைவாசத்திற்கு பின்னர் 27 ஆம் தேதி நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.. இதில் வேடிக்கை என்னவென்றால் விசாரணை நடை பெற்றுக்கொண்டிருக்கும் போதே கை கால்களை வைத்து உலக மற்றும் இந்திய ஊடகங்கள் பொய்களை பரப்பியது. இதில் இந்திய ஊடகங்கள் ஒரு படி மேலேயே சென்று பொய்யான செய்திகளின் மூலம் ஏற்கனவே இந்தியாவில் தீவிரவாதிகள் என பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களையே உண்மையான தீவிரவாதிகளை போல பொய்களை பரப்பும் நமது ஊடக பார்ப்பன எலிகள் ஹனீப் சம்பவத்தை உலக தீவிரவாதத்துடன் இந்திய முஸ்லிம்கள் தொடர்பு போன்ற கற்பனைகளுக்கு பஞ்சமில்லா செய்திகள் தான் வளம் வந்தது.

கர்நாடகாவை சேர்ந்த பாஜக கூட்டணியான ஜனதாதள கூட்டணி அரசின் குமாரசாமியும் கூட சரியான முறையில் அவருக்கு உதவி புரியவில்லை. இறுதியாக நிரபராதி என விடுவிக்கப்பட்ட பின்னர் மீடியாக்கள் வழக்கம் போல மவ்னத்தை தான் பதிலாக கொடுத்தது கர்நாடக அரசு ஹனீபிற்கு வேலை தருவதாக உறுதி அளித்தது ஆனால் அதை புறக்கணித்த ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கே புறப்பட்டு சென்றார். இவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக ஆஸ்திரேலியா அரசு விருது வழங்கி கவ்ரவித்தது. 

இந்திய சிறைகளிலும் ஹனீபை போன்ற பல இளைஞர்கள் காவல் மற்றும் உளவுத் துறையாலும் மீடியாக்களாலும் பொய்களின் மூலம் வஞ்சிக்கப்பட்ட பல முஸ்லிம் இளைஞர்கள் பொய்யான வழக்குகளில் நீதியும் இல்லாமல் வழக்கும் இல்லாமல் பல ஆண்டுகள் சிறையில் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.. ஆனால் என்னவோ இன்றுவரை அந்த அப்பாவிகளுக்கு நீதி வழங்கப்படாமல் அநியாயமாக அலைகழிக்கப்படுகின்றனர்..இவர்கள் முஸ்லிம்களாக வாழ்வது குற்றமா ?? அல்லது ஆட்சி அதிகாரங்கள் முதல் மீடியாக்கள் வரை ஹிந்துத்துவ வாதிகளால் கட்டுப்படுத்தப்படுவதன் விளைவா?. எது எப்படியோ அப்பாவிகளுக்கு நீதி மறுக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!