Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, January 21, 2013

கடல் கரையை கடக்குமா?

ராவணன் படத்திற்கு பிறகு மணிரத்னம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இயக்கியுள்ள படம் கடல்.

இப்படத்தில் கார்த்திக் மகன் கவுதம் ஹீரோவாகவும், ராதாவின் 2வது மகள் துளசி ஹீரோயினாகவும் அறிமுகமாகின்றனர். இவர்களுடன் அர்ஜூன், அரவிந்தசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடற்கரையோர மக்களின் வாழ்க்கை பதி‌வுடன் ஒரு அழகிய காதலுமே கடல் படத்தின் கதை. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில் கடல் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், கடல் படத்திற்கு யு சான்று அளித்துள்ளனர். படத்திற்கு யு சான்று கிடைத்த மகிழ்ச்சியோடு ரிலீஸ்க்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. பிப்ரவரி முதல்வாரத்தில் கடல் திரைக்கு வர இருக்கிறது. (அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ராவணன் எந்த பலனும் தரவில்லை. கடலாவது மணிக்கு கை கொடுக்குமா? படம் வெளிவந்ததும் தெரிந்துவிடும்.)

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!