Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, April 13, 2012

இவருக்கு முதலிடம் தாராளமா தரலாமா! ஏன்??

பிரபல Time சஞ்சிகையின் உலகின் 100 செல்வாக்கான நபர்கள் 2012 பட்டியலுக்கான மக்கள் தெரிவு வாக்கெடுப்புக்கள் நேற்றுடன் முடிவடைந்துள்ளன.

இப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்திலிருந்து வந்த இந்திய குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி இறுதிநேர எதிர்வாக்குகளால் மூன்றாமிடத்துக்கு சென்றுள்ளார்.வாக்கெடுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போது, தமக்கு ஆதரவாக வாக்கு சேர்க்குமாறு குஜராத் மக்களிடம் பகிரங்க கோரிக்கை விடுத்து மோசடி செய்ததாக மோடி மீது காங்கிரஸ் கட்சி கடும் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தது. தன் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புவதாக காங்கிரஸ் மீது மோடியும் பதிலுக்கு குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்நிலையில் நேற்றுடன் முடிவடைந்த வாக்கெடுப்பின் படி மோடிக்கு அப்பட்டியலில் 256,792 வாக்குகள் ஆதரவாகவும், 266,684 வாக்குகள் எதிராகவும் கிடைத்துள்ளன. இதையடுத்து அப்பட்டியலில் அதிகூடிய எதிர்வாக்குகள் பெற்றவராக நரேந்திர மோடி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முதலிடத்தை Anonymous எனும் இணையத்தள ஹேக்கர்ஸ் குழுவினர் பிடித்துள்ளதுடன், இரண்டாம் இடத்தை Reddit இணையத்தள நிர்வாக இயக்குனரான Erik Martin பிடித்துள்ளார்.எனினும் இப்பட்டியலின் இறுதி முடிவை தீவிர பரிசீலனைக்கு பின்னர் டைம் சஞ்சிகையின் எழுத்தாளர் குழு ஏப்ரல் 17ம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது.,

(குஜராத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் அகமதாபாத், சூரத், ராஜ்கோட்டிலிருந்து 16 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். மோடி பங்கேற்கும் விழாவிற்கு எப்படி கூட்டத்தை கூட்டுகிறார்கள். பாஜவுக்காக எப்படி நிதி வசூலிக்கிறார்கள் என்பதை பார்த்துத்தான் போலீசாருக்கு பதவி உயர்வு வழங்குகிறார்கள்), இனப்படுகொலையாளன் என்று முதலிடம் கொடுக்கலாம் இந்த மோ(கே)டிக்கு., உலக தீவிரவாதியில் இவனுக்கு முதலிடம் தரலாம்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை விசாரிக்க அமெரிக்க சட்டத்துறை தீர்மானித்துள்ளதுபோல், நர மாமிச மோடியையும் விசாரிக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் செய்யும் உதவியாகயிருக்கும்.

2 comments :

Hindu-led anti-Muslim massacres of 10 years ago and the flawed investigations in their wake...," the article says.

The Time magazine article says Modi is a firm, "nonsense leader" who can steer India. by. TIME MAGAZINE

இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலம் என்று பார்பன பத்திரிக்கைகளால் தொடர்ந்து புகழப்பட்ட குஜராத் இனப்படுகொலை நாயகன் நரேந்திர மோடியின் அரசு சரிவர செயல்படவில்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி)யின் அறிக்கை குஜராத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!