Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, January 14, 2012

N R I களை பதற வைத்த இணையதள செய்தி !!

மும்பை: வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் உலகளாவிய வருமானத்தில் 30 சதவீத வரியை இந்திய அரசு விதித்துள்ளதாக இணையளங்களிலும், மின்னஞ்சல்களிலும் உலா வந்த புரளிச் செய்தி என்.ஆர்.ஐக்களை பதறவைத்தது.

ஜெ பெக்(jpeg)இமேஜ் வடிவிலான இச்செய்தி ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி வெளியானதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்நாளிதழில் இதுத்தொடர்பான எச்செய்தியும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் உலகாளாவிய(worldwide incom) வருமானத்தில் 30 சதவீத வரிவிதிக்கப்படும் தகவலை வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவிகடந்த வாரம் ஜெய்ப்பூரில் நடந்த பிரவாசி பாரதீய திவஸ்(PMD)யில் வெளியிட்டதாகவும் அந்த புரளிச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பொதுவாக இதுபோன்ற முக்கியமான முடிவுகள், அறிவிப்புகள் பொது நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் அறிவிக்கக் கூடாது. பாராளுமன்றத்தில் அதுவும் நிதிஅமைச்சர் தான் முறையாக அறிவிக்கவேண்டும். முதலீட்டாளர்களுக்கு விரோதப்போக்கான சூழல் இருக்கிறது என்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கூற்றால் ஆத்திரமடைந்த ரவி இவ்வாறு கூறியிருக்ககூடும் என்று கூறுகிறார்கள். அந்த விழாவில் ரவியாலும் மற்ற அமைச்சர்களாலும் அவமானப்பட்ட சிலரே வெளிநாடுவாழ் இந்தியர்களை கலங்கடிக்க இவ்வாறு புரளியை கிளப்பி விட்டிருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

என்.ஆர்.ஐக்களின் சேமிப்பாக கடந்த ஆண்டு 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை இந்தியாவுக்கு வந்துள்ளது. வருமான வரி, முதலீடு தொடர்பான அந்நிய செலாவணி கட்டுப்பாடு, சுங்கம்(கஸ்டம்ஸ்), என்.ஆர்.ஐக்கள் மீதான வரிவிதிப்பு ஆகியவற்றில் சிறு மாற்றம் தேவைப்பட்டால் கூட அதற்கு பல்வேறு முதலீட்டாளர்கள் மத்தியில் பல மாதங்கள் விவாதிக்க வேண்டிவரும். மேலும் வல்லுநர்களின் ஆலோசனைகளை பெறவேண்டும். அதுமட்டும் போதாது, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய கேபினட்டின்(மத்திய அமைச்சரவை) அனுமதியையும் பெறவேண்டும். மேலும் விரிவான இந்திய ஜனநாயக நடைமுறையில் சாதாரண நிகழ்ச்சிகளில் பலலட்சம் மக்களை பாதிக்கும் முக்கிய அறிவுப்புக்களை அமைச்சர்களால் வெளியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!