Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, January 1, 2012

புத்தாண்டில் எரிச்சலை ஏற்படுத்திய டுவிட்டர்!

லண்டன் : "ட்விட்டர்' சமூக வலைதளம் மூலம் நேற்று முன்தினம், உலகம் முழுவதிலும் உள்ளோர், பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர். இந்நிலையில், பிரிட்டனில் நேற்று முன்தினம், மதிய நேரத்தில், "ட்விட்டர்' ஸ்தம்பித்து விட்டது.

அந்த நேரத்தில், ஜப்பானில் புத்தாண்டு துவங்கிவிட்டதால், "ட்விட்டரில்' வாழ்த்துக்கள் குவிய ஆரம்பித்து விட்டன. அதாவது, நிமிடத்துக்கு, 16 ஆயிரத்து 197 வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால், "ட்விட்டர்' ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஸ்தம்பித்து விட்டது.

இதனால், ஏற்கனவே வாழ்த்து தெரிவித்தவரும், வாழ்த்து தெரிவிக்கப்பட்டவரும் தங்கள் செய்திகளைக் காண முடியாமல் தவித்தனர். இதன் காரணமாக, பயனாளிகள் கடும் எரிச்சல் அடைந்தனர்.

மேலும், அவர்கள் அனுப்பிய செய்திகளில், "ட்விட்டர் ஈஸ் ஓவர் கெபாசிட்டி என்ற, மூன்று வார்த்தைகள் எனது இன்றைய நாளை வீணாக்கிவிட்டன' எனவும், "இந்த புத்தாண்டில் "ட்விட்டர்' எடுக்க வேண்டிய உறுதிமொழி என்னவென்றால், "இனி நான் எப்போதும் ஓவர் கெபாசிட்டி என்ற நிலைக்குப் போக மாட்டேன்' என்பது தான்' எனவும் கிண்டல் செய்துள்ளனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!