Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, January 24, 2012

அதிகம் பேசினால் ஆபத்து ! ஆய்வில் !!

மனிதனோடு இணைந்த தவிர்க்க முடியாத இன்னொரு உறுப்புபோல் மாறிக் கொண்டிருக்கிறது, செல்போன்! இது எவ்வளவு முக்கியமானது என்றாலும், அதிக நேரம் பேசினால் காது கேட்கும் திறன் பாதிக்கும் என்கிறது சமீபத்திய ஆய்வு.

மும்பை கே.இ.எம். மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை மருத்துவ பேராசிரியர் நீலம் சாதியும், டாக்டர் தனஸ்ரீ சிப்லங்கரும் இணைந்து 18 முதல் 40 வயதுக்குட்பட்ட 50 பேரின் காது கேட்கும் திறனை ஆய்வுசெய்தனர்.

ஆய்வுக்குட் பட்டவர்களில் 68 சதவீதம் பேர் 21 முதல் 25 வயது இளைஞர்கள். அவர்களில் 16 பேர் பெண்கள். ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களில் 23 பேர், (அதாவது 46 சதவீதத்தினர்) செல்போனில் அளவுக்கு அதிகமாகப் பேசி, தங்கள் காது கேட்கும் திறனை ஓரளவு இழந்திருந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

செல்போனில் பேசுபவர்கள் மட்டுமன்றி, அதை பயன்படுத்தி காது கருவிகளை மாட்டிக்கொண்டு அதிக நேரம் பாட்டுகேட்பவர்களுக்கும் காதுகேட்கும் திறன் குறையும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. "இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் வருடக்கணக்கில் செல்போனை பயன்படுத்தியவர்கள்.

வலது காதில் வைத்து பெரும்பாலும் பேசியதால், வலது காது வலியால் பாதிக்கப்பட்டிருக்கவும் செய்கிறார்கள்'' என்றும் டாக்டர் நீலம் சாதி தெரிவித்துள்ளார். ஆய்வுக்கு உள்ளான 50 பேர்களில் 20 பேர் இடது காதில்வைத்து செல்போனை பயன்படுத்துகிறவர்கள். 19 பேர் வலதுகாதில்வைத்து பேசியவர்கள்.

மீதி 11 பேர் இரண்டு காதுகளிலும் மாறிமாறி வைத்து பேசியவர்கள். இவர்களில் 13 பேர் காது வலியாலும், 11 பேர் காது அடைப்பினாலும், 19 பேர் காது சரியாகக் கேட்காமலும், 7 பேர் காதில் வித்தியாசமான சத்தம் கேட்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!