Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, January 18, 2012

வழக்குகளால் வாய்யடைத்த கொலை வெறியன் !!

அஹ்மதாபாத்:குஜராத்தில் லோக் ஆயுக்தா நீதிபதியை ஆளுநர் கமலா பெனிவால் நியமித்தது செல்லும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதிக்கான பதவி கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து நிரப்பப்படாமல் இருந்தது. இதனையடுத்து மாநில ஆளுனர் கமலா பெனிவால் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி லோக் ஆயுக்தா நீதிபதியாக ஆர்.ஏ. மேத்தாவை நியமித்தார்.

இதற்கு மோடியும், பா.ஜ.கவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. ஆளுநர் பெனிவாலின் நடவடிக்கை அரசியல் சட்டத்திற்கு எதிரானது என சுட்டிக்காட்டி மோடி அரசு உயர்நீதிமன்றத்தை அணுகியது. முதல்வர் மற்றும் அரசிடம் கலந்தாலோசிக்காமல் லோக் ஆயுக்தா நீதிபதியை நியமித்ததாகவும், ஆளுநர் பாரபட்சமாக நடந்துக் கொள்வதாகவும் மோடியின் அரசு நீதிமன்றத்தில் வாதிட்டது.

இந்த வழக்கு தொடர்பாக,கடந்த அக்டோபர் மாதம், இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் வெவ்வேறான தீர்ப்பை வழங்கினர்.

இதனால்,இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி அகில் குரோசியிடம் சென்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, லோக் ஆயுக்தா நீதிபதியை ஆளுநர் நியமித்தது செல்லும் என்று தீர்ப்பளித்தார். மேலும் மோடி அரசின் மனுவும் தள்ளுபடிச் செய்யப்பட்டது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு மோ(கே)டிக்கு பலத்த அடியாகும்.,வழக்குகளால் வாய்யடைத்த போனான் இந்த கொலை வெறியன் !!

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!