Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, May 15, 2011

ஆட்சி அமைக்கும் முன்பே தொடங்கிய குடும்பி பிடி ? தேர்தல் கூத்து

தேர்தல் வெற்றிக்கு தங்களது கட்சி தான் காரணம் என்று சண்டை இட்டு கோவையில் மோதிக்கொண்ட அ.தி.மு.க.- தே.மு.தி.க. நிர்வாகிகளால் பதட்டம். கோவையில் சுருளிராஜ் (வயது 50) என்பவர் பீளமேடு சவுரி பாளையதில், அ.தி.மு.க.வின் 15-வது வார்டு பொறுப்பாளராக உள்ளார்.

தேர்தல் முடிவு கொண்டாட்டத்தில் பங்கேற்று பின்னர், நேற்று சவுரிபாளையத்தில் உள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் இருந்தார். இந்நிலையில், அந்த பகுதியின் தே.மு.தி.க. வார்டு பொறுப்பாளர் ராஜன் (38), தே.மு.தி.க. நிர்வாகி மயில்சாமி ஆகிய இருவரும், அ.தி.மு.க. அலுவலகம் முன்பு நின்று கொண்டு விஜயகாந்தை வாழ்த்தி கோஷமிட்டு, பின்னர் அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

இதைக்கண்டு கோபமான, அ.தி.மு.க. பொறுப்பாளர் சுருளிராஜ் கட்சி அலுவலகம் முன்பு கார்களை நிறுத்தி இடையூறு செய்யாமல் ஓரமாக நின்று வாழ்த்து தெரிவியுங்கள் என்று கூறவே, ராஜனும், மயில் சாமியும் கேப்டன் விஜயகாந்தால்தான் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது.

அப்படி இருக்கும் போது, எங்களிடம் நீ எப்படி கேள்வி கேட்கலாம் என வாக்குவாதம் செய்து, கைகலப்பில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் மாறிமாறி தாக்கிக் கொண்டதில், சுருளிராஜனுக்கு காயம் ஏற்பட்டு, அவர் பீளமேடு போலீசில் புகார் செய்தார். சுருளிராஜ், புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தே.மு.தி.க. பொறுப்பாளர் ராஜனை கைது செய்தனர். வெற்றி பெற்ற இரண்டே நாட்களில் நடந்துள்ள அ.தி.மு.க. – தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கிடையேயான இந்த மோதல் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!