Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, May 10, 2011

போர் குற்றவாளியை தண்டிக்க போராட்டம்!! கனடாவில்

இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி கனடாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை ஒன்றை நடத்துமாறு கோரி கனடாவில் வசிக்கும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உள்ளிட்ட உலகில் உள்ள ஏனைய ஜனநாயக நாடுகள் இணைந்து இந்த விசாரணையை நடத்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் மனித உரிமை மீறில்கள் மற்றும் போர் குற்றங்கள் இடம்பெற்றிருப்பதற்கான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், கனேடிய தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!