Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, October 9, 2012

தேனிலவுக்கு பாய் விரித்த பாசிசம்! செங்கொடி கம்பத்தில் பறந்த காவி!?



ஒரு காலத்தில் கடும் பகைவர்களாக இருந்த ஆர்.எஸ்.எஸ்.ஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று கேரளாவில் தேனிலவில் கொஞ்சிக் குலாவுகின்றன.

சமீபத்தில் வடக்கு கேரளாவிலுள்ள கண்ணூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பி. ஜெயராஜன் அகில பாரதீய வித்தியார்த்தி பரிஷத்(ABVP) என்ற ஹிந்துத்துவ ஃபாசிஸ்டுகளின் மாணவர் அமைப்பைச்  சார்ந்தவரான சச்சின் கோபால் கொல்லப்பட்டதையடுத்து அவர் வீட்டுக்குச் சென்று “துக்கம் விசாரித்து விட்டு” வந்தார்.
பதிலுக்கு அதே மாவட்டத்திலுள்ள பானூர் என்ற ஊரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டதையடுத்து ஆர்.எஸ்.எஸ். குலக் கொழுந்துகள் அந்த அலுவலகத்தைப் பார்வையிட்டு “துக்கம் விசாரித்து விட்டு” வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஹிந்துத்துவ ஃபாசிஸ்டுகளின் மலையாளப் பத்திரிகையான “கேசரி”யில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. இந்தக் க்ட்டுரையை ஆர்.எஸ்.எஸ்.ஸின் “அறிவுஜீவிகளின்” பிரிவான பாரதீய விசார கேந்திரத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் டி.ஜி. மோகன்தாஸ் எழுதியுள்ளார்.
இந்த இரு அமைப்புகளும் ஒன்று சேர வேண்டும், “நண்பர்களாக” மாறவேண்டும் என்று அந்தக் கட்டுரையில் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
கடந்த இருபதாண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்.ஸும், கம்யூனிஸ்ட் கட்சியும் கொலை மோதல்களில் ஈடுபட்டதில் 150 வரை அவர்களது உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது கண்ணூர் மாவட்டத்தில் மட்டும் நடந்தது. அப்படியிருக்க இப்பொழுது இந்தக் “கொள்கை கோமேதகங்கள்” ஒன்று சேரக் காரணம் என்ன?
சோழியன் குடுமி சும்மா ஆடுமா? காரணம் இருக்கிறது. கடந்த காலங்களில் இந்த இரு கொலைகார அமைப்புகளும் தங்களைத் தாங்களே வெட்டிக் கொள்வார்கள். அத்தோடு முஸ்லிம்களையும் கொன்றொழித்தார்கள். முஸ்லிம் சொத்துகளைச் சூறையாடினார்கள். ஆனால் சமீப காலங்களில் தென்னிந்தியாவில் முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சியின் பயனாக அவர்களால் இப்பொழுது பழைய மாதிரி வாலாட்ட முடியவில்லை. பழைய வேகத்தில் அவர்களால் முஸ்லிம்களைத் தாக்க முடியவில்லை. முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சி எனும் தடுப்புச் சுவரில் அவரகளின் தலை இப்பொழுது மோதுகின்றது.
ஒரு தரப்புச் சேதங்களே இருந்த காலம் போய் இன்று இரு பக்கமும் சேதங்கள் ஏற்படுகின்றன. ஆக, இருவருக்கும் பொது எதிரியான முஸ்லிம்களை “எதிர் கொள்வதற்கு” இன்று இந்த இரு குண்டர் அமைப்புகளும் ஒன்று சேர முயற்சி செய்கின்றன.
அதன் விளைவாகத்தான், ஃபாசிச “கேசரி”யில் வெளிவந்துள்ள அந்தக் கட்டுரை கம்யூனிஸ்ட் கட்சியினரை ஆகா, ஓகோ என்று புகழ்கின்றது. ஆர்.எஸ்.எஸ்.ஸில் நாத்திகர்கள் நுழையக் கூடாது என்றும் இல்லை, கம்யூனிஸ்ட் கட்சியில் நம்பிக்கையாளர்கள் நுழையக் கூடாது என்றும் இல்லை என்று ஆரூடம் சொல்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி அப்துந் நாஸர் மஃதனியின் பி.டி.பி. கட்சியுடன் கூட்டணி வைத்தது என்பதால் அது முஸ்லிம் அடிப்படைவாதத்தை ஆதரிக்கிறது என்பது உண்மையில்லை என்கிறது. அது தேர்தல் கூட்டணி மட்டும்தான் என்று சமாதானம் கூறுகிறது.
இந்த இரு அமைப்புகளும் ஊழலுக்கெதிராகப் “போராடும்” அமைப்புகளாம், ஆதலால் இரண்டும் இணைவது காலத்தின் கட்டாயமாம் என்று கட்டுரையாளர் கூறுகிறார். இருந்தாலும் ஃபாசிசம் பாசத்தை அதிகம் காட்டவிடாமல் பார்த்துக்கொள்கிறது. அதாவது, இந்தக் கருத்து கட்டுரையாளரின் சொந்தக் கருத்து என்றும், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வக் கருத்து இல்லை என்றும் ஹிந்துத்துவ ஃபாசிசத் தலைவர்கள் கூறும் அதே வேளை, “யாரும் எங்களுக்குத் தீண்டத்தகாதவர்கள் இல்லை” என்று தெளிவு படுத்தியுள்ளார்கள்.
இதனைப் படித்தவுடன் அவர்களிடம், அதாவது அவாள்களிடம் தலைவிரித்தாடும் தீண்டாமையை யாரும் எண்ணிவிட வேண்டாம். அவர்கள் சொல்வது “அரசியலில் யாரும் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தரப் பகைவர்களும் இல்லை” என்ற அரதப் பழமொழி உண்டல்லவா, அதைத்தான் நவநாகரிகமாகச் சொல்லியுள்ளார்கள்.
இதைத்தான் பா.ஜ.க. தலைவர் ஓ. ராஜகோபால் இப்படிச் சொல்கிறார் : “அரசியல் கட்சிகள் ‘பொதுவான காரியத்திற்காக’ ஒன்று சேர்வதில் தவறில்லை. அரசியலில் நிரந்தரப் பகைவர்கள் இல்லை!”
இந்தப் “பொதுவான காரியத்திற்காக” என்றால் முஸ்லிம்களைக் கொல்வதற்காக என்று நாம் விளக்கிச் சொல்லத் தேவையில்லை. சிறு குழந்தைக்குக் கூட இந்த மொழி புரியும்.
ஆனால் கீழே உள்ள “கொள்கைக் குன்றுகளான தொண்டர் குண்டர்கள்” ஒன்று சேரத் துடிக்கும் பொழுதும், மேலே உள்ள கொள்கைக் குலக் கொழுந்துகளான தலைவர்களுக்கு இதனை ஜீரணிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால்தான் “கேசரி”யில் வெளிவந்துள்ள கட்டுரை குறித்து கருத்து தெரிவித்த சி.பி.எம்.மின் ஆட்சிக்குழு உறுப்பினர் எம்.ஏ. பேபி இவ்வாறு கூறுகிறார்: “வகுப்புவாத சிந்தனையையும், ஃபாசிசத்தையும் பரப்புவதுதான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. அதனைத் தனிமைப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம். இருவரும் ஒன்று சேரவேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. அவர்கள்தான் ஆசைப்படுகிறார்கள்.”
ஆக, வேதாளம் கிளம்பியது ஹிந்துத்துவ ஃபாசிசப் புற்றிலிருந்துதான் என்கிறார் அவர். அதனால்தானோ என்னவோ வடக்கு கேரளாவில் குறிப்பாக கண்ணூர் மாவட்டத்தில் வெட்டு குத்து கொலைப் பகையோடு காலங்கடத்திக் கொண்டிருந்த இந்த இரு அமைப்பினருக்கிடையில் கடந்த ஆறு மாதங்களாக எந்தப் பெரிய வன்முறைகளும் நடைபெறவில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
முஸ்லிம்களைக் கொல்வதற்கு, முஸ்லிம் சொத்துகளைச் சூறையாடுவதற்கு, முஸ்லிம் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்வதற்கு, முஸ்லிம் பிஞ்சுக் குழந்தைகளை வெட்டிப் பிளந்து போடுவதற்கு – மொத்தத்தில் முஸ்லிம் ரத்தத்தைக் குடிப்பதற்கு எவ்வளவு பெரிய கொடும் பகையாளர்களும் ஒன்று சேர்வார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
மாற்று*

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!