Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, October 30, 2012

பக்கவாத நோயா பார்த்துகொங்கோ!!

பக்கவாத நோய் என்பது திடீரென்று மூளைக்கு செல்லும் ரத்தகுழாயில் ஏற்படும் பாதிப்பாகும். உலகம் முழுவதும் மரணத்தை உண்டாக்கும் முக்கியமான நோயாக பக்கவாதம் உள்ளது. இந்தியாவில் ஆண்டு தோறும் 48 லட்சம் பேர் பக்கவாத நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

இவர்களில் 88 சதவீதம் பேர் ரத்தகுழாய் அடைப்பினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு ஆளாகின்றனர். இந்தியாவில் 40 வயதுக்குள் உள்ள 15 சதவீதம் பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

உலக பக்கவாத நோய் தினத்தை முன்னிட்டு, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள நரம்பியல் துறையில் ரத்த அடைப்பை சரிசெய்யும் சிகிச்சை பிரிவு இன்று தொடங்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளிலேயே, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மட்டுமே ரத்த அடைப்பால் ஏற்படும் பக்கவாதத்திற்கு ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள ஊசி இலவசமாக (முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம்) போடப்படுகிறது. இந்த ஊசியால் பக்கவாதத்தால் ஏற்படும் ரத்த குழாய் அடைப்பை முழுவதுமாக சரி செய்யலாம். (ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29ம் தேதி ‘உலக பக்கவாத நோய் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.)

2 comments :

உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.........

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!