Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, October 17, 2012

விசா பிச்சை கேட்டவனை விரட்டி அடித்த ஜெர்மனி!!

புது தில்லி: நரேந்திர மோடி ஆளும் குஜராத் குறித்து ஜெர்மனி என்ன நிலைப்பாட்டை முன்பு எடுத்துள்ளதோ அதில் எந்த மாற்றமும் இல்லை என்று ஜெர்மனியின் இந்தியத் தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் கூறினார்.

பிரிட்டனைப் போல் தாங்கள் நிலைப்பாட்டை மாற்றப் போவதில்லை என்று அவர் தெளிவு படுத்தினார். குஜராத் மாநிலம் அடுத்த மாதம் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

2002ல் நரேந்திர மோடியின் ஆதரவுடன் குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனப்படுகொலைகளுக்குப் பின் பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற மேலை நாடுகள் குஜராத் மீது தடைகளை விதித்தன. குஜராத்துடன் தங்கள் அரசு ரீதியான தொடர்புகளை முறித்துக்கொண்டன. நரேந்திர மோடி அமெரிக்காவில் நுழைவதற்கு அமெரிக்கா விசா தர மறுத்தது.

“எங்கள் நிலையில் மாற்றம் இல்லை. அடுத்த மாதம் குஜராத்தில் தேர்தல் ஆரம்பிக்கிறது. அது குறித்து நாங்கள் எந்த அறிக்கையும் வெளியிட விரும்பவில்லை. பிரிட்டன் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி அறிவிக்கும் முன்பு எங்களிடம் இப்படி அறிவிக்கப்போவதாகத் தெரிவித்திருந்தது. ஆனால் பிரிட்டனின் இந்த மாற்றம் எங்கள் நிலைப்பாட்டில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை” என்று ஜெர்மனியின் இந்தியத் தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் கூறினார்.

இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள ஜெர்மனியின் வியாபாரக் குழுவுக்கு வரவேற்பு நிகழ்ச்சியையும், கலாச்சார நிகழ்ச்சியையும் ஜெர்மனியின் இந்தியத் தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் தனது இல்லத்தில் திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்தார். அந்த வேளையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.(உலக நாடுகள் எல்லாம் இவனை பயங்கரவாதி என்று முத்திரை குத்தி விசா தர மறுக்கும்போது இவனுக்கு பிரதமர் ஆசை வேறு., சரிப்பா பிரதமரா ஆக்கிடுவோம் வெளிநாடுகளுக்கு போகவேண்டுமே அப்ப எப்படி? அகதியாகவா வெளிநாடு செல்வார்.,இந்திய பிரதமர்.???? )

3 comments :

2002 குஜராத் படுகொலைகளில் மோடிக்கு உள்ள பங்கு பற்றிய விசாரணைக் குழுவின் 600 பக்க அறிக்கை தற்போது தெகல்காவிடம் இருக்கிறது. அந்த அறிக்கையின் செய்திகள் அதிர்ச்சி அளிப்ப வையாக உள்ளன; ஒரு சிறந்த நிருவாகி, நல்லாட்சி தருபவர் என்று மிகுந்த கவனத்துடன் உருவாக்கி, வளர்ந்து வந்த மோடியின் தோற்றத்திற்கு பெருத்த அடியாக விளங்குகிறது.

குஜராத்தில் எவ்வாறு எல்லாம் நீதிக்குப் புறம்பான செயல்கள் நடைபெற்று வந்துள்ளன என்று கடந்த எட்டு ஆண்டு காலமாக கலவரங்களால் பாதிக்கப் பட்டவர்களும், மனித உரிமைக் குழுக்களும் பெருங்குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

காவல்துறையும், மாநில அரசும் எவ்வாறு கலவரக்காரர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தனர் அல்லது அவர்களுக்கு எவ்வாறு தூண்டுதலாகவும், ஆதரவாகவும் இருந்தனர், படுகொலைகளை நிகழ்த்த எவ்வாறு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தனர், ஒரு புதிய ஆபத்து நிறைந்த அளவுக்கு பொதுமக்களின் உணர்ச்சியை ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் எவ்வாறு தூண்டிவிட்டனர், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக மாநில அரசு எவ்வாறு தொடர்ந்து கெடுதல்களைச் செய்து கொண்டிருந்தது, குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு மாறாக, அவர்களுக்கு உதவும் வகையில் எவ்வாறு அரசு வழக்கறிஞர்கள் நீதி மன்றங்களில் நீதியையே பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுத்தனர் என்றெல்லாம் அவர்கள் கூறி வந்துள்ளனர். by.razeen.m

இந்த கேடியை தெரு நாயை போல் கல்லால் அடித்து கொள்ளபட வேண்டியவன்

நாடு போகிற போக்க பார்த்தால் கண்டிப்பா அவரு அகதியா கூட போகமாட்டாரு போல........

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!