Loading...

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, March 28, 2011

இணையத்தில் இணைத்த உறவு!

கிழக்கு லண்டன் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் (47) என்பவர் பொழுதுபோக்காக இணையதளத்தில் சாட்டிங்கில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாரா கேம்ப் (42) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது.

பல்வேறு விஷயங்களைப் பேசியபின் தங்கள் சிறுவயது குடும்பத்துடன் பொழுதைப் போக்கிய அனுபவங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர். அப்போது இருவரும் ஒரே மாதிரியான சம்பவங்களைக் கூறினர். அப்போதுதான் சாரா சிறுவயதில் தன்னை விட்டுப் பிரிந்து சென்ற தங்கை என்பது ஜார்ஜுக்கு தெரியவந்தது.

சாரா தனது பெயரை மாற்றிக் கொண்டதால் அவரை முதலிலேயே ஜார்ஜால் அடையாளம் காண முடியவில்லை. 1975-ம் ஆண்டு இவர்களது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அப்போது ஜார்ஜுக்கு வயது 11, சாராவின் வயது 6. ஜார்ஜ் தந்தையுடன் கிழக்கு லண்டனுக்குச் சென்றார். தாயுடன் சென்ற சாரா, திருமணமாகி எடின்பர்க் நகரில் வசித்து வந்தார்.

இந்நிலையில் 35 ஆண்டுகளுக்குப்பின் இணையதளத்தின் மூலம் இவர்கள் தங்கள் உறவை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் பிரிட்டன் பத்திரிகைகளில் வெளியாகி நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!