Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, June 12, 2011

கை பேசியில் பேசியினால் மட்டுமல்ல , டெக்ஸ்ட்டிலும் வரும் பாதிப்பு!

பொதுவாக செல்போனில் எஸ்எம்எஸ் அனுப்புவதும், பெறுவதும் ஆபத்தில்லாததாகக் கருதப்படுகிறது. ஆனால் சமீபத்திய ஆய்வுகள் தொடர்ச்சியாக எஸ்எம்எஸ் அனுப்புவதாலும், படிப்பதாலும் தூக்கமின்மை, படபடப்பு, கோபம் முதலியவை ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளன.

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த "மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரியைச்' சேர்ந்த சமூக மருத்துவவியல் துறைத்தலைவர் சஞ்சய் தீட்சித் இது பற்றிக் கூறியதாவது, தொடர்ச்சியாக எஸ்எம்எஸ் அனுப்புவதினால் இளைஞர்களுக்கு மன அழுத்தமும், பயமும் ஏற்படுகிறது. 18-லிருந்து 25 வயது வரையுள்ள 150 இளைஞர்களிடத்தில் ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளது.

தொடர்ச்சியாக எஸ்எம்எஸ் அனுப்புவதினால் தினசரி வேலைகளும், படிப்பும் பாதிக்கப்படுவதாக இளைஞர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மேலும் ஆழ்ந்து உறங்க முடியவில்லை என்பதை அவர்கள் உணர்கிறார்கள். இளைஞர்கள் எஸ்எம்எஸ் அனுப்பிவிட்டு அதற்கான பதில் வரவில்லையென்றால் மனதளவில் பாதிப்படைந்து, யாரும் தங்களுடன் தொடர்பில் இல்லையென்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

பதில் எஸ்எம்எஸ்ஸýக்காக இளைஞர்கள் செல்போனை சோதித்துப் பார்ப்பதும், பதில் வரவில்லையெனில் கவலையடைவதும் "டெக்ஸôடாஃபிரேனியா' என்று அழைக்கப்படும் என்றார்.

இளைஞர்களில் பெரும்பாலோர் அதிக எஸ்எம்எஸ் அனுப்புவதற்காகக் கட்டணம் குறைவாக உள்ள திட்டங்களையே தேர்ந்தெடுப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தூக்கம் கண்ண கட்டுது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!