Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, April 14, 2011

கலை இழந்த அரசியல்! கலை இழக்கப்போகும் இலங்கை அணி?

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அணி தோல்வி அடைந்ததால், கேப்டன் பதவியில் இருந்து குமார சங்ககரா பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், புதிய கேப்டனாக ஏஞ்சலோ மேத்யூஸ் அல்லது திலகரத்ன தில்ஷான் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் பரவின. இந்த இருவரில் ஒருவரை கேப்டனாக்க முன்னாள் கேப்டன் குமார சங்ககராவும் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதே கருத்தை அரவிந்த டி சில்வா தலைமையிலான வீரர்கள் தேர்வுக் குழுவும் கூறியது.

ஏஞ்சலோ மேத்யூஸ் கொழும்புவைச் சேர்ந்த தமிழர். திலகரத்ன தில்ஷான் இஸ்லாமியராக இருந்து புத்த மதத்துக்கு மாறியவர். இதனால் இவர்களில் ஒருவரை அணி கேப்டனாக நியமிக்க இலங்கை அரசு ஒப்புதல் தரவில்லை என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், சிங்கள வீரர் ஒருவரை கேப்டனாக நியமிக்க அரசு தரப்பு விரும்புவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய இழுபறி காரணமாகவே இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தேர்வுக் குழு பதவி விலகியதாகவும் இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!