உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தைக் காண ரசிகர்கள் திரையரங்குகளிலும், வீடுகளிலும் முடங்கியதால் சென்னையின் முக்கிய வீதிகள் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடின.
சென்னையில் உள்ள பள்ளிகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்துக்கும் மதியத்துக்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டன. போட்டியைக் காண்பதற்காக அனைவரும் அவசரமாக வீடு திரும்பியதால் பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால் 2 மணிக்கு மேல் முக்கியச் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின. எப்போதும் பரபரப்பாகவும், போக்குவரத்து நெரிசலிலும் சிக்கித் தவிக்கும் மயிலாப்பூர், வேப்பேரி, பெசன்ட் நகர், குரோம்பேட்டை, அண்ணா நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடின.
ஷாப்பிங் மால்கள், பார்களிலும் எல்சிடி திரைகளில் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பட்டது.
மும்பை முக்கிய நகரங்களில் உள்ள பெரிய திரையரங்குகள், ரெஸ்டராண்டுகள், ஷாப்பிங் மால்கள், பப்புகள் ஆகியவற்றில் ஒளிபரப்பப்பட்டன. இங்கு ஏராளமானோர் கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்தனர். இதற்காக அவர்கள் முன்பதிவும் செய்திருந்தனர்.
ஏராளமான ரசிகர்கள் தங்கள் முகத்தில் பல்வேறு வண்ணங்களை தீட்டியிருந்தனர். ஏராளமான பார்களில் மது விற்பனையும் படுஜோராக நடைபெற்றது. வடக்கு மும்பையில் உள்ள. போட்டியை முன்னிட்டு மகாராஷ்டிரத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது. போட்டியை காண வந்திருந்த ரசிகர்கள், மைதானத்தில் வீடு திரும்புவதற்காக சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் மதியத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டன.
கொல்கத்தாவில் காலையில் இருந்து கிரிக்கெட் ஜுரம் ரசிகர்களை தொற்றிக்கொண்டது. பட்டாசுகள், மூவர்ணக் பலூன்கள், இந்திய அணியின் டி-ஷர்ட்கள் ஆகியவற்றின் விற்பனை படுஜோராக நடைபெற்றது. இங்குள்ள முக்கிய நகரங்களில் பிரமாண்டமான திரைகளில் ஆட்டம் ஒளிபரப்பப்பட்டது. இதை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர்.
1 comments :
துன்பக் கடலில் துவளும் இந்தியா!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்....
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_02.html
Post a Comment