Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, March 19, 2011

அழகிரிக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை!

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் 1-ம் தேதி அமலுக்கு வந்தது. மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அழகிரி அரசு முறைப் பயணமாக தில்லியிலிருந்து சென்னைக்கு மார்ச் 2-ம் தேதி விமானத்தில் பயணம் செய்தார். அங்கிருந்து மார்ச் 4-ம் தேதி மதுரைக்குச் சென்று அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பத்திரிகை செய்திகளை மேற்கோள்காட்டி தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்தது.

இதுதொடர்பாக அவருக்கு விளக்கம் கேட்டு மார்ச் 5-ம் தேதி தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. மறுநாள் இதற்கு அழகிரி பதில் அளித்திருந்தார். தான் முதல் முறையாக மக்களவை உறுப்பினரானதால் தனக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் சரிவரத் தெரியவில்லை என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றும் தனது விளக்கத்தில் அழகிரி தெரிவித்திருந்தார்.

முதல் முறை எம்.பி. என்பதால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டாம் என தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. இதையடுத்து அரசுப் பயணமாக அவர் தில்லியிலிருந்து சென்னைக்கும் அதன் பிறகு மதுரைக்கும் சென்ற வகையில் ஏற்பட்ட விமானக் கட்டணம் உள்ளிட்ட இதர பயணக் கட்டணங்கள், தங்கும் விடுதி ஆகிய செலவு தொகையை அரசுக்குத் திரும்பச் செலுத்தவேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாது அவர் கவனமாக இருக்கவேண்டும் என்று தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!