Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, October 4, 2011

கேப்டனுக்கு சாக் ட்ரிட்மென்ட் கொடுக்கும் ஜெயா !!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோயிலில் இன்று இரவு 7.45க்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

இதற்கு முன்னதாக அவரின் பிரச்சாரத்திற்கான அனுமதியை முறையாக நகர கட்சியினர் வாங்கியிருந்தனர். மூன்று மணி அளவில் அவரது பிரச்சாரம் குறிப்பிடப்பட்டிந்தாலும் தேர்தல் காரணமாக வரும் வழிகளில் அவரது பிரச்சார இடங்கள் அதிகப்படுத்தப்பட்டன. அதன் காரணமாக அவர், சங்கரன்கோயில் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது.

இதனிடையே பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்காக மைக் செட்டுகள் கட்டப்பட்டிருந்தன. விஜயகாந்த் வர காலதாமதம் ஆனதால், கூட்டம் திரண்டு வந்துகொண்டே இருந்தது.

இதனால் யாரோ ஒருவரின் (ஜெயா) தூண்டதலின் பேரில் ஸ்பாட்டுக்கு வந்த சங்கரன்கோயில் போலீசார் மைக் செட்டுகள் அனைத்தையும் ஆட்டோவில் அள்ளிப்போட்டுக்கொண்டு சென்றனர்.

இதனால் ஆத்திரமான விருதுநகர் மாவட்ட தேமுதிக செயலளாள்ர் ராஜா, மாநில கேப்டன் மன்ற செயலாளர் செரீப் போன்றவர்கள், டிஎஸ்பி மதிவாணணோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் ஏதோ ஒன்று சொல்ல, கட்சிக்காரர்கள், நாங்கள் முன் அனுமதி வாங்கயபோதே கண்டிஷனை சொல்ல வேண்டியதுதானே. இப்போது வந்து சொல்கிறீர்கள் என வாக்குவாதம் செய்தனர்.

இதனிடையே நடந்தவற்றை விஜயகாந்துக்கு தகவல் கொடுத்தனர். நீங்கள் பேசவிருந்த மைக்கையும் பறித்துக்கொண்டு சென்றுவிட்டார்கள் போலீசார் என்று விஜயகாந்த்திடம் தகவல் தெரிவித்தனர்., இதன் பின்னர் சங்கரன்கோயில் வந்த விஜயகாந்திற்கு, கட்சியினரால் உடனடியாக புது மைக் தரப்பட்டது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!